அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படும் தீர்மான மொன்றை மேற்கொள்ள தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் கட்சியை சேர்ந்த சுமார் 15 பேர் சுயதீனமாக இயங்குவது தொடர்பாக தற்போது கலந்துரையாடி வருவதாக கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் முடிவுகள் தொடர்பாக அதிருப்தியடைந்துள்ள இவர்கள், எதிர்காலத்தில் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் சம்பந்தமாக அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதை தவிர தற்போதைய நிலைமையில் மாற்று வழியில்லை என கலந்துரையாடிள்ள இவர்கள், அரசாங்கம் தொடர்பாக வாக்காளர்களிடம் இருந்து கிடைக்கும் அழுத்தங்கள் காரணமாக ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் எனவும் பேசியுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, டொலர் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு,விவசாயிகளின் பிரச்சிளைகள், அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால், மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான மனநிலை காணப்படுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறான நிலைமையில், தமது தொகுதிகளுக்கு செல்லும் போது, மக்கள் இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த காலங்களில் அரசாங்கம் தொடர்பில் பெருமையாக பேசி வந்த அமைச்சர்களில் பலர் வாய்மூடி மௌனிகளாக இருந்து வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலும் கத்தோலிக்க அமைச்சர்கள் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக அண்மைய காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.