கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் மேலதிக வகுப்புக்களும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் மேலதிக வகுப்பொன்றின் கழிவறைக்குள் இருந்து அதிநவீன கமரா ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்தே, இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கம்பஹா பகுதியில் அதிகளவிலான மாணவர்கள் பங்குப்பற்றும் இரண்டு மேலதிக வகுப்புக்களின், கழிவறைகள் பாதுகாப்பு குறைவாக காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
வகுப்பறையொன்றின் படிகளின் ஊடாக செல்லும் போது, கழிவறை தென்படும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாநகர சபை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இந்த சோதனையை முன்னெடுத்துள்ளனர்.
அதேபோன்று, மற்றுமொரு வகுப்பறையில், கழிவறை காணப்படும் இடத்திற்கு அருகில் CCTV கமரா பொருத்தப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த CCTV கமராக்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அதிகாரிகள், மேலதிக வகுப்பு நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.