இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் “கரம் கொடுப்போம் | Give Hands” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சேவை நாடிகளின் நலன்கருதி கரம் கொடுப்போம் | Give Hands” வேலைத்திட்டத்தின் கீழ் சுயதொழில் முயற்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில் உதவி மற்றும் உடனடித் தேவைக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தன்னார்வ தனவந்தர்களின் நிதிப் பங்களிப்போடு கரம் கொடுப்போம் | Give Hands” வேலைத்திட்டமானது, பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவினால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. குறித்த இன் நிகழ்விற்காக சாய்ந்தமருதைச் சேர்ந்த வெளிநாட்டில் வசித்து வரும் தன வந்த குடும்பத்தினால் உதவிகள் வழங்கப்பட்டன.
உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் அவர்களின் தலைமையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 28 ஆம் திகதி திங்கள் கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்களான பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. ஏ.ஆர். .றிஸ்வானுல் ஜன்னா பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் திருமதி எஸ். றிஸ்மியா ஜஹான் மற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்