தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணங்களை உடனடியாக அதிகரிக்குமாறு இலங்கை மத்திய வங்கி மீண்டும் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
இதேவேளை மத்திய வங்கி கடன் அட்டை களுக்கான வட்டி வீதத்தையும் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரிக்கவும் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதன்படி, மத்திய வங்கி கடன் வசதி வீதத்தை தலா 100 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
இதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் 6.5 ஆகவும், நிலையான கடன் வழங்கல் வசதி வீதம் 7.5% ஆகவும் அதிகரிக்கப்படும்.