ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நாளை பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சமர்ப்பித்துள்ள பிரேரணை தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 15 அம்ச தீர்மானம் ஒன்றை அண்மையில் சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.