இம்மாதம் 31ஆம் திகதி வரை தெரு விளக்குகளை அணைப்பதற்கு அறிவுறுத்துமாறு உள்ளளூராட்சிமன்ற தலைவர்களிடம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்சாரத்தை சேமிக்கும் ஒரு கட்ட நடவடிக்கையாக இதனை நடைமுறைப்படுத்துமாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்சாரத்தை சேமிக்கும் நடவடிக்கையாக நாடளாவிய ரீதியில் குறிப்பிட்ட சில மணிநேரங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.