இறக்காமம் பிரதேச செயலகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்ட சர்வதேச பெண்கள் தினம்.
மார்ச் மாதம் 08 ஆம் திகதி உலக மகளிர் தினமானது, உழைக்கக் கூடிய பெண்கள் அவர்களுடைய உரிமைக்காக நடத்திய போராட்டங்களின் விளைவாகத் தோன்றியதாகும். சம வேலைக்கு சம கூலிக்காக, பாலியல் துன்புறுத்துதல்களுக்கு எதிராக, பெண்களின் வாக்குரிமைக்காக, பெண்கள் ஆண்களுக்குக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்படுவது வழக்கமான பிறகு, ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மகளிர் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் திகதிதி பெண்களின் உரிமைக்காகவும், உலக அமைதிக்காகவும் கொண்டாட வேண்டும் என்று 1975 இல் அறிவித்தது.
உலக மகளீர் தினமான மார்ச் 08 ஆம் திகதியை முன்னிட்டு உலகலாவிய ரீதியிலும் தேசிய ரீதியிலும் பெண்களுக்கான சமத்துவம், சம வாய்ப்பு, உரிமைகள் என்பவற்றை வலியுறுத்தி பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இறக்காமம் பிரதேசத்தில் மகளீர் தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக “நாடும் தேசமும் உலகமும் அவளே” எனும் கருப்பொருளின் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) அவர்களின் தலைமையில் இறக்காமம் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் 2022.03.08 ஆம் திகதி செவ்வாய் கிழமை வெகு சிறப்பாக மகளீர் தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.
இப் பெண்கள் தின விஷேட நிகழ்விற்கு மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. வேதநாயகம் ஜகதீசன் அவர்கள் பிரதம அதீதியாக கலந்து சிறப்பித்தார்.
விஷேட அதீதிகளாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், கணக்காளர் றிம்ஷியா அர்சாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கௌரவ அதிதிகளாக நிருவாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமீல், நிருவாக உத்தியோகத்தர் (GN) எச்.பி. இந்திரசிறி யசரட்ன மற்றும் Islamic Relief நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் ஏ. சுஹுபான் ஆகியோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஏ.ஆர். றிஸ்வானுல் ஜன்னாஹ் வின் நெறியாழ்கையில் பெண்கள் தின நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி மகளீர் தின நிகழ்வில் விஷேட அம்சமாக “வனிதாபிமான” போட்டி நிகழ்ச்சியில் மாகண மட்டத்தில் வெற்றியீட்டிய போட்டியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் மூவின மக்களையும் உள்ளடக்கிய கலை நிகழ்ச்சிகள், ஹிஜ்ரா பெண்கள் அபிவிருத்தி சங்கத்தின் பெண்கண் தின சிறப்பு நாடகம், பெண்கள் தின சிறப்பு கவிதை, பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.
இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் இயங்கிவரும் பெண்கள் அபிவிருத்தி சங்கங்களில் சிறப்பாக செயற்பட்டு வரும் சங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான கௌரவமும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.