வாகன சாரதிகளுக்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கலத்தினால் விசேட அறிவிப்பொன்றினை வழங்கியிருக்கின்றது.
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகின்ற காலத்தை நீடிப்பது தொடர்பிலும்.ஒரு வருட காலத்திற்கு தற்காலியமாக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை வழங்குவது தொடர்பாகவும் அறிவித்தலொன்றினை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன் பிரகாரம் , 2022 ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் 2022 ஜூன் மாதம் 30 ஆம் திகதியன்று காலாவதியாகின்ற சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தினை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று , 2022 ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் 2022 செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை காலாவதியாகின்ற சாரதி அனுமதிப்பத்திரங்களினது செல்லுபடியாகும் காலத்தினை மேலும் மூன்று மாதங்களாக நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
,தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு பாதுகாப்பான முறைகளை கொண்ட கணனி மென்பொருள் ஒன்றினை பொலிஸ் திணைக்களத்திற்கு அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது .
அத்தோடு ,தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு ஒரு வருட காலம் செல்லுபடியாகும் புதிய தற்காலிக சாரதினுமதிப்பத்திரம் ஒன்றை உரிமையாளருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் ,நாட்டின் நிலைமைகள் சீரானதன் பின் உரிய அட்டைகளை அச்சிட்டு விண்ணப்பதாரிகளின் வீட்டிற்கே நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரங்களை அனுப்பி வைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கூறியுள்ளது.