மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து முகக்கவசமணிந்த அணிந்தவர்கள் தம்மையும் தனது குடும்பத்தினரையும் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்வதாக தெரிவித்த ஹிருணிகா பிரேமச்சந்திர, எங்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
எனது பிள்ளைகள் மிகவும் சிறியவர்கள்,அவர்கள்பாடசாலை செல்லும்போது மோட்டார் சைக்கிளில் முகக்கவசமணிந்த நபர்கள் பின்தொடர்வதை அவதானித்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் திருமணநிகழ்வொன்றிற்கு நேற்று சென்றேன் எனது வாகனத்தின் பின்னால் இரு மோட்டார் சைக்கிளில் வந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எனது தொலைபேசிகளையும் கணவரின் தொலைபேசிகளையும் ஒட்டுக்கேட்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் தனது வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த பெண்கள் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை என்பது ஜனாதிபதிக்கு தெரியவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பொதுஜனபெரமுனவிற்கு வாக்களித்தவர்கள் உள்ளனர். வாக்களிக்காதவர்கள் உள்ளனர்,பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் – நாட்டின் ஜனாதிபதியிடமிருந்து பதில்களை கேட்டே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது – இது தவறா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தற்போது ஆபத்தை எதிர்கொள்கின்றனர்- அவர்களிற்கும் பி;ள்ளைகள்உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் அச்சத்தில் உள்ளனர்-அவர்களிற்கு குழந்தைகளும் குடும்பமும்உள்ளனர்,நாட்டின் பெண்கள் என்ற அடிப்படையில் நாங்கள் நேர்மையாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் எங்களை பின்தொடர்கின்றனர் – நாங்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கின்றோம் என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.