எதிர்வரும் திங்கட்கிழமை (14) முதல் வழமை போன்று மாணவர்களை வகுப்புக்களுக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சினால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தின் ஊடாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொவிட் – 19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் பாடசாலைகளை நடத்திச் செல்வதில் ஏதேனும் சிக்கல் நிலைமை ஏற்படுமாக இருந்தால், அது குறித்து வலக கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன், தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவலுக்கு மத்தியில் இதுவரை காலமும் மாணவர்களுக்கு பகுதி பகுதியாகவே பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 14ம் திகதி முதல் வழமை போன்று அனைத்து மாணவர்களையும் வகுப்புக்களுக்கு அழைக்க கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.