தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் அரச பாடசாலைகளின் நீர் கட்டணத்தை செலுத்துமாறு கோரி, பாடசாலைகளுக்கு சுற்று நிரூபமொன்று அனுப்பபட்டுள்ளது.
பாடசாலைகளுக்கான நீர் கட்டணத்தை இதுவரை திறைசேரி செலுத்தி வந்த நிலையில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தற்போது பாடசாலைகளுக்கே நீர் கட்டண பட்டியலை அனுப்ப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றது.
இந்த நிலையில், பாடசாலைகளின் நீர் கட்டணத்தை திறைசேரி செலுத்தாதனாலேயே , தாம் பாடசாலைகளுக்கு நீர் கட்டணத்தை செலுத்துவதற்கான கோரிக்கையை தெரிவித்ததாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு பூராகவுமுள்ள பாடசாலைகளிடமிருந்து 40,000 அலகுகளுக்கான நீர் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதுடன், ஒரு அலகுக்கு 6 ரூபா நிவாரண சலுகையொன்று வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு நீர் விரையம் இன்றி பயன்படுத்தும் வகையிலான பயிற்சிகளை வழங்கும் நோக்கத்துடன் இந்த திட்டத்தை அமுல்படுத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும் சில பாடசாலைகளில் மாத்திரமே கிணற்று நீர் பயன்படுத்தப்படுவதாக கூறிய அவர், பெரும்பாலான பாடசாலைகளில் குழாய் நீரே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.