நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்படும் B பிரிவு கழகங்களுக்கு நடத்தப்படும் லீக் அடிப்படையிலான போட்டிகளினது ஆரம்பகட்ட போட்டி வெள்ளிக்கிழமை (11) இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதி பொதுச் செயலாளரும், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் பொதுச் செயலாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமாகிய எம்.ஐ.எம். அப்துல் மனாப் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளரும், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளருமான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் கலந்து கொண்டு லீக்கினை ஆரம்பித்து வைத்தார்.முதலாவது போட்டியாக மருதமுனை மருதம் அணிக்கும் மருதமுனை க்ரீன் மெக்ஸ் அணிக்குமிடையிலான போட்டி அமைந்திருந்தது. பிரதம அதிதியினால் கைலாகு செய்யப்பட்டு நினைவுப் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு முதல் போட்டியில் விளையாடியே மருதமுனையை பிரதிநிதித்துவப்படுத்தும் மருதம் விளையாட்டுக்கழகம் 7:0 என்கின்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றியை சுவிட்சரித்துக்கொண்டது.
இவ்வாறான விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஊரிலும் ஏற்பாடு செய்வதானால் போதை பாவனைகளை இல்லாமல் செய்து, ஆரோக்கியமான இளைஞர் சமுதாயத்தினை விளையாட்டுத் துறையின் ஊடாக உருவாக்க முடியும் என்று தவிசாளர் எம்.ஏ. தாஹிர் இங்கு கருத்து தெரிவிக்கும் போது கூறினார்.