தேசிய அரசாங்கம் அமையப்போவதாக வெளியாகின்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானதாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கிடையிலான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கத்தினை அமைப்பது குறித்து வெளிவருகின்ற செய்தி குறித்து கேற்க்கப்பட்டபோதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் குறிப்பிடும் போது இது குறித்து தனக்கு தெரியாது என கூறிய அவர், அப்படி ஒன்று நடந்தால், தான் என்ன அவுட்டா? என கேள்வி எழுப்பிக்கொண்டே மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் சிரித்துள்ளார்.
அரசாங்கம் தற்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமா ஆலோசனைகள் கேட்கின்றது என ஆசிரியர்கள் கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளர்கள் .
வங்கியினை கொள்ளையிட வேண்டுமானால், ரணிலிடம் தான் ஆலோசனை கேட்கலாம் என கூறிய மஹிந்த ராஜபக்ஸ, அரசியலில் ஆலோசனைகள் கேட்குமளவிற்கு இந்த அரசாங்கம் இன்னும் தாழ்ந்துவிடவில்லை எனவும் கூறியுள்ளார்.