எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசு அவசர தீர்மானமொன்றினை எடுத்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியகிடைக்கின்றது.
இவ்வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காகவே அரசு முதல் திட்டமிட்டிருந்தது. இதன் காரணமாக உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தினை ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டது.
ஆனாலும், மேற்படி முடிவை தற்போது மாற்றியுள்ள அரசு, முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.
இவ்வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடருக்கு முன்பாதாக, தேர்தலினை நடத்தி மக்கள் ஆணையைப் பெறுவதற்கு அரசு உதேசித்துள்ளது .