25 வருடங்களின் பின்னர் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரத்துக்கு பெண் தலைவி தெரிவுசெய்யப்பட்டுள்ளார் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவியாக பிரபல ஒலிபரப்பாளர் புர்கான் பீ இப்திகார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
போரத்தின் 25 வது வருடாந்த மாநாடு இன்று
கொழும்பு பஹார்த்தின் மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அளகப்பெரும கலந்து கொண்டதுடன் பிரதம பேச்சாளராக கலாநிதி ரஸ்மின் கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக இந்திய பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்து கொண்டார்.
இந்த அமைப்பில் கடந்த 22 வருடங்களாக தலைவராக பதவிவகித்த என்.எம் அமீன் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பேராளர் மாநாட்டின் புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவியாக பிரபல ஒலிபரப்பாளர் புர்கான் பீ இப்திகார் தெரிவு செய்யப்பட்டார், செயலாளராக சர்வதேச தேசிய விருது வென்ற ஊடகவியலாளர் எம்.ஜே பிஸ்ரின் முஹம்மத் தெரிவு செய்யப்பட்டதுடன் பொருளாளராக ரோயிட்டர்ஸ் ஊடகவியலாளரும், ஊடக பயிற்றுவிப்பாளருமான சிஹார் அனீஸ் தெரிவு செய்யப்பட்டார்.