நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை வீட்டு குடியிருப்புகளை நோக்கி வந்தடைந்த காட்டு யானைகளினது நடமாட்டத்தினால் அப்பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர். சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை மக்கள் குடியிருப்பு பகுதியினுள் இன்று அதிகாலை யானைகளினது அட்டகாசத்தினால் வீட்டின் மதில்கள், வாயிற்கதவு மற்றும் பயிர்களும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனால் இரவு நேரங்களில் அச்சம் நிலவிவருவதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
யானைகளினது அட்டகாசத்தினால் பிரதேச காணிகளில் பயிரிடப்பட்ட பயிர்கள் அதிகமாக சேதமாகியுள்ளதுடன் வீட்டுகளில் இன்றையநாள் தங்கியிருந்த மக்கள் தெய்வாதிகமாக உயிர் தப்பியுள்ளனர்.மேலும் இரவு வேளைகளில் குடியிருப்புக்குள் ஊடுருவும் காட்டு யானைகள் அயலிலுள்ள காடுகளில் இருந்து குறித்த கிரமத்திற்குள் வந்து இவ்வாறு சேதம் விளைவித்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவவாறு வருகின்ற யானைகள் கூட்டம் வீட்டு மதிலினை உடைத்து சேதம் விளைவித்ததோடு பயன்தரும் பயிர்களையும் மரங்களையும் கூட துவம்சம் செய்து சென்றுள்ளன. காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதம் தொடர்பாக கிராம சேவையாளரிடமும் பொலிஸாரிடமும் கிராம மக்கள் அறிவித்துள்ளதாக விசனம் தெரிவித்தனர்.