மாளிகைக்காடு நிருபர்-
குவைத் நாட்டினுடைய அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சேரிட்டி சமூக அமைப்பு நிந்தவூர் கமு/ ஜேர்மன் நட்புறவு ஆரம்ப பாடசாலைக்கு இலவச குடிநீர் தாங்கி நிர்மாணித்து இலவச நீர் இணைப்பிணை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு இன்று (14) திங்கட்கிழமை காலை பாடசாலையின் முன்றலில் நடைபெற்றது.
அரச காரியாலயங்கள், பாடசாலைகள், மதஸ்தலங்களுக்கு இலவச குடிநீர் வழங்கள் மற்றும் பல சமூக நல வேலைத்திட்டங்கள் அந்நூர் சமூக அமைப்பு மக்களுக்காக தொடர்ந்தும் நாடாளாவிய ரீதியில் செய்து வருகின்றது.
அவர்களினது வேலைத்திட்டங்களில் ஒரு கட்டமாக அந்நூர் சமூக அமைப்பினது பிரதேச இணைப்பாளரான ஐ.எல். றஸ்மி நிந்தவூர் கமு/ ஜேர்மன் நட்புறவு ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான இவ்வேலைத்திட்டத்தினை பாடசாலை நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக இன்று கையளித்தார்கள்.
நிந்தவூர் கமு/ ஜேர்மன் நட்புறவு ஆரம்ப பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். ஹிதாயத்துள்ளா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.எம். நஜீப், அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ. எல். என். ஹுதா, பாடசாலை பிரதியதிபரான எம். ஷஹீத் மற்றும் அந்நூர் சேரிட்டியின் சமூக அமைப்பின் பிரதேச காரியாலய உத்தியோகத்தர்களான மௌலவி ஏ.வி.எம். சிப்லி (நஹ்ழி) மற்றும் எம்.எச். இல்யாஸ் பாடசாலை நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.