நூருல் ஹுதா உமர்
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் விஷேட தேவையுடைய மாணவர்கள் கல்வி பயிகின்ற டயமன் விசேட தேவையுடையோர் பாடசாலையினது 6 ஆவது ஆண்டின் நிறைவு விழா டயமன் விசேட தேவையுடையோர் பாடசாலையின் ஸ்தாபகரும் மூதூர் பிரதேச சபை உறுப்பினருமாகிய பாடசாலை அதிபர் அகீதா தலைமையில் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ரீ.எம் ஐய்யூப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு பல்வேறு தேவைகளை உடைய மாணவர்களுக்கு சீருடைகளை தனவந்தர்களின் ஒத்துழைப்புடன் அன்பளிப்பு செய்தார். இந்நிகழ்வில் மேலும் மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம் எம் ஏ அரூஸ் மற்றும் கிண்ணியா பிரதேச சபையின் உறுப்பினர் முக்தார், சட்டத்தரணி சீன எம் ஹனான், ஓய்வுபெற்ற அதிபர் மஃரூப், விசேட தேவையுடையோர்கள் பாடசாலையின் ஆசிரியர்களான நகோஸ்வரன் தக்சிகா, தமிழ் செல்வன் வினித்திரா பிராந்திய பிரமுகர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.