இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு அமைய அதிகரிக்கப்பட்ட வட்டி வீதங்கல் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
உரிமம் பெற்றிருக்கின்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்றிருக்கின்ற சிறப்பு வங்கிகளின் கடனட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம் 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டிருந்தது.
அத்துமட்டுமல்லாது அடகு வசதிகளுக்காக வருடாந்த வட்டியின் வீதமானது 12 சதவீதத்தினால் வ அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் குறித்த அதிகரிக்கப்பட்ட வட்டி வீதங்களை இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது