”நாடே நாசம்… இது போதும்!… இனியும் நாசமாகிட விட முடியாது” என்ற தொனிப்பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்படுகின்றது.
கொழும்பில் பல்வேறு பகுதிகளில் இந்த பேரணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசைகளில்; காத்திருக்கின்றமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த ஆர்ப்பாட்ட பேரணியை அடுத்து கொழும்பின் பல்வேறு பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.