இலங்கை போக்குவரத்து சபையின் மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணம் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
இதற்கமைய குறைந்த பேருந்து கட்டணம் 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து பேருந்திற்க்கான கட்டணத்தினையும் அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது .
இதற்கமைவாகவே சொகுசு பேருந்து , அரைசொகுசு பேருந்து மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சகல பேருந்துகளுக்குமான கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றது .
புதிய பேருந்து கட்டணங்கள் தொடர்பாக அறிவித்தல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று அறிவிக்கப்படயிருக்கின்றது .
அதுமட்டுமல்லாமல் தொடருந்து கட்டணத்தையும் எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம கூறினார்.