மாத்தளையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்கள் இருவர்களுக்கிடையில் காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையினால், கத்திக்குத்துக்கு இலக்காகி நிலையில் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமையின் போது, கத்தியால் குத்தப் போவதாக கூறிய பாடசாலை மாணவனினையும் கைது செய்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற இரண்டு மாணவர்களின் கழுத்து மற்றும் தலையில் கத்தியினால் குத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்களலில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காத்திக்குத்து சம்பவம் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவருடனான காதல் விவகாரம் காரணமாகவே இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டிருக்கின்ற மாணவனான சந்தேகநபர் மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.