இலங்கையில் 1867ம் ஆண்டு முதல் தடவைமுறையாக ஜேம்ஸ் டெயிலர் என்கின்ற வெளிநாட்டவரினால் செய்கை செய்யப்பட்ட தேயிலையினை இன்று சர்வதேச ரீதியில் சிலோன் டீ என்ற நாமத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது.
ஜேம்ஸ் டெயிலர் தேயிலை செய்கையை ஆரம்பித்த நிலையில், இந்தியாவிலிருந்து தமிழர்களை இலங்கைக்கு அழைத்து வந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றது.
இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள், இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருகை தந்தவர்கள், முதன் முதலில் அம்மன் சிலையொன்றை அங்கிருந்து கொண்டு வந்ததாக நம்பப்படுகின்றது.
இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்த தமிழர்கள், முதலில் கண்டி மாவட்டத்தினுடைய லூல்கந்துர பகுதிக்கு அழைத்து வந்திருக்கின்றார்கள்.
அவ்வாறு லூல்கந்துர பகுதிக்கு சென்ற மக்கள் , முதலில் அங்கு ஆலயமொன்றை அமைத்து வ்லோப்பட்டுள்ளனர்.
இப்படி இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகின்ற வெங்கலத்திலான அம்மன் சிலையொன்று தான் அங்கு முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது, இதிலிருந்துதான் லூல்கந்துர பகுதியில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் வழிபாடுகளினை ஆரம்பித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனாலும், இந்தியாவிலிருந்து முதல் முதலில் கொண்டு வரப்பட்ட அந்த அம்மன் சிலை, பிற்காலத்தில் திருடப்பட்டிருக்கின்றது .
, குறித்த அம்மன் சிலையுடன் கொண்டு வந்ததாக கூறப்படும் கல் சிலைகளை ஆலயத்தில் வைத்து இன்றும் அந்த பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
குறித்த ஆலயம் சென்ற 9 வருடங்களுக்கு முன்னர் புனர்நிர்மாணங்கள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கின்றது .
எனினும், இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகின்ற கல் சிலைகள் ஆலயத்தின் அருகில் வைக்கப்பட்டு அனைத்து வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனபோதும் , ஆலயத்தின் அருகில் மிகவும் அழகான கருப்ப சாமி சிலையொன்றை வைத்து, லூல்கந்துர மக்கள் வழிபட்டு வருகின்றமையும் இங்கு விசேட அம்சமாகும்.