(நூருல் ஹுதா உமர் )
கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம். பிர்தௌஸ் தலைமையில் ஊடகவியலாளர் ராசிக் நபாயிஸ் எழுதிய “ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி”‘ நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (19) மருதமுனை கலாசார மண்டபத்தின் மர்ஹூம் ஆசாத் காமில் அரங்கினில் நடைபெற்றது.
இவ்வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜெ. லியாகத் அலி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதனை தொடர்ந்து இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம் .பாசில் மற்றும் அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், கிழக்கின் கேடயத்தின் தலைவருமான எஸ்.எம். சபீஸ் அவர்களும் அரசியல் விமர்சகர் சட்டத்தரணி ஊடகவியலாளருமான இஸ்மாயில் பி .மஆரிப் மற்றும் ஓய்வுநிலை அதிபரான ஏ .ஆர். அப்துல் றாசிக், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிறை எப்.எம் வானொலியின் பிரதிப் பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் பி. எம். எம். ஏ. காதர், மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அமைப்புக்களினது பிரதிநிதிகள், இலக்கியவாதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இன் நிகழ்வில் கிழக்கின் கேடயம், கிழக்கு முஸ்லிம் பேரவை, செயற்பாட்டு ஊடகவியலாளர் அமையத்தினர்,விளையாட்டுக்கழகம், லக்ஸ்டோ ஊடக அமையத்தினர் போன்றவர்கள் ராசிக் நபாயிஸுக்கு பொன்னாடை போர்த்தியும், நினைவுச்சின்னம் வழங்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டார் அத்துமட்டுமல்லாமல் எழுத்தாளரின் ஊடக சேவையின் பாராட்டி பலரும் பல்வேறு விளக்கவுரையினை வழங்கினர்.