இந்தியாவினுடைய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவித் திட்டத்தின் கீழ், இலங்கைக்கு இன்று முதலாவது டீசல் ஏற்றிய கப்பல் வருகைத் தந்துள்ளதாக என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் கூறியுள்ளது.
இதன்படி, 35,000 மெற்றிக் தொன் டீசலினை ஏற்றிய கப்பல், கொழும்பு துறைமுகத்தை அண்மித்திருக்கின்றது.
இவ்குறித்த கப்பலிலிருந்து டீசலை தரையிறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் அறிவித்திருக்கின்றது.
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற எரிபொருளின் தட்டுபாட்டினை நிவர்த்தி செய்யும் வகையிலே, இந்தியாவினால் இந்த முதல் கட்டமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.