நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தின் நிலைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பிலும் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 23ஆம் திகதி சர்வகட்சிகள் மாநாடு ஒன்றினை நடாத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
ஆனாலும் இந்த சர்வகட்சிகள் மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு பல கட்சிகள் முடிவெடுத்திருக்கின்றன.
அதிலும் குறிப்பாக அரசாங்கத்தின் 11 பங்காளி கட்சிகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிஇருக்கின்றன.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியவர்கள் சர்வகட்சிகள் மாநாட்டினை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர்.
மேலும், சர்வக்கட்சிகள் மாநாட்டினை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியாகிய ஐக்கிய மக்கள் சக்தியும் தீர்மானித்துள்ளதாகவும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரனும் இந்த மாநாட்டினை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து , இதில் கலந்து கொள்ளாமலிருப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் சர்வகட்சிகளின் மாநாட்டில் புறக்கணிக்கவுள்ளதாகவும் அதன் தலைவர் மனோ கணேஷன் தெரிவித்திருக்கின்றார்.
அதுமட்டுமல்லாமல் , ஜனாதிபதியினால்ன் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்ற சர்வகட்சிகள் மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துக் கொள்ளாதிருக்க தீர்மானித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.