நூருல் ஹுதா உமர்
இலங்கையின் இளைஞர் பாராளுமன்றத்தினுடைய வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகளுக்கான பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முப்தி ஆகியோரும் இணைந்து பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் ஆரிபுல் இஸ்லாம் அவர்களுடனான சந்திப்பொன்று பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பானது எமது நாட்டில் கல்வி, விளையாட்டு, வெளிவிவகாரம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றில் இளைஞர்களினது பங்களிப்புகள் தொடர்பானதாகவும் அதில் உள்ள குறைபாடுகள் குறித்தும் மேலும் இத்துறைகளில் பங்களாதேஷ் நாட்டின் இளைஞர்களின் பங்களிப்பு பற்றியும் கலந்துரையாடப்பட்டு.
பின்னர், இலங்கையின் வெளியுறவு மற்றும் சுற்றுலாத்துறை போன்றவை மேலும் வளர்வதற்கு தேவைப்பாடுகள் குறித்தும் விசேடமாக இலங்கை மற்றும் பங்களாதேஷ் இளைஞர்களினது உறவினை வலுப்படுத்தும் புதிய செயற்திட்டங்களுக்கான ஆதரவினை எதிர்வருகின்ற காலங்களில் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.