நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருதில் பதுங்கியிருந்த சஹ்றானுடைய குழுவை சேர்ந்த பயங்கரவாதிகனை ; இனங்காட்டி, நாட்டினில் இடம்பெறவிருந்த பாரிய அனர்த்தங்களை தவிர்த்தது, இங்கு அமைக்கப்பட்டிருந்த சிவில் பாதுகாப்பு குழுவே என்றும் இதற்க்காக குறித்த சிவில் பாதுகாப்புக் குழு அரசாங்கத்தால் கெளரவிக்கப்பட்டிருந்தார்கள். இது சாய்ந்தமருதுக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது உள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிவுகளிலும் சமூக பாதுகாப்புக்குழுக்களை அமைக்கின்ற தேசிய திட்டத்தின் அடிப்படையில் சாய்ந்தமருது 10 மற்றும் 17 ஆம் பிரிவுகளுக்கான குழுக்களை அமைக்கும் நிகழ்வு , 20 ஆம் திகதி சாய்ந்தமருது இளைஞர் வள நிலையத்தில், கிராம சேவை உத்தியோகத்தர் எல்.நாஸர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். சென்ற காலங்களில் சாய்ந்தமருதில் இருந்த சிவில் பாதுகாப்புக் குழுக்கள் சிறந்த முறையினில் செயற்பட்டிருந்தது . அதனைபோன்று புதிதாக அமையவுள்ள சமூக பாதுகாப்புக் குழுக்களும் செயற்பட வேண்டும். அப்படி செயற்பட்டால் தான் சென்ற காலங்களில்
கிடைத்ததை போன்று உயரிய கௌரவங்களைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன்; நாங்கள் எதிர்கால சந்ததிக்கு சிறந்த ஒழுக்கமான பிரதேசமாக இந்த ஊரை கையளிக்க முடியும் எனவே மிகுந்த கவனத்துடன் செயற்படுங்கள் பொலிசார் தரப்பினால் உங்ககுக்கு முடியுமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்க நாம் தயாராய் உள்ளோம் எனவும் கூறினார்.
ஊருக்குள் புதிதாக வருகின்றவர்கள் விடயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் அதுமட்டும்மல்லாமல் தற்சமயம் ஆங்காங்கே இடம்பெறுகின்ற கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்காகவும் இந்த குழுக்களினுடைய ஒத்துழைப்பு எங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அத்துடன் இளைஞர்களுக்கிடையில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனைகள் மற்றும் கடத்தல் விடயத்திலும் அவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த சமூக பாதுகாப்புக் குழுக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிடடார்.
நிகழ்வின்போது இரண்டு பிரிவுகளுக்குமான சமூக பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இன் நிகழ்வின் போது கடந்த காலங்களில் இரு கிராம சேவகர் பிரிவுகளிலும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் தலைவர்களாக கடமையாற்றியவர்கழும் கிராமங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் உத்தியோகததர்கழும் மற்றும் கிராமங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.