நூருல் ஹுதா உமர்
கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களினது ஜனாஸாக்களை மக்கள் கதரக்கதர எரித்த சாபத்தையே இந்த ஆட்சியாளர்கள் அனுபவித்து வருகின்றார்கள் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் நாட்டு மக்களை படுபாதாளத்துக்குள் அரசாங்கம் தள்ளி இருக்கின்றது .
நாட்டு மக்களினது சாபத்தைப் பெற்ற அரசாங்கமாகவே இருக்கிறது. வீட்டுக்குப் போங்கள் என்று சொல்லுகின்ற அளவுக்கு இன்றைய ஆட்சியாளர்கள் மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முஸ்லிம் காங்கிரஸினுடைய சம்மாந்துறை இளைஞர் காங்கிரஸின் 5ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இளைஞர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வினில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அங்கு மேலும் கூறுகையில்;
இன்றைய ஆட்சியாளர்களும் ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று பிச்சை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் இந்தியா ஒரு பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. ஆனால் இது இன்னும் இரண்டு மாதத்திற்குள் முடிந்து விடும். அதற்கு பிறகு எந்த நாட்டில் போய் கடன் வாங்குவது. மீண்டும் இவ்வாறான நெருக்கடி ஏற்படும். இவ்வாறான நிலைமை கடந்த காலங்களில் கிரேக்கத்திலும், லெபனான் போன்ற நாடுகளில் ஏற்பட்டிருந்தன எனவும் சுட்டிக்காட்டினார்.
அந்த நாடுகளில் அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சியை அமைத்தாலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தன. அவ்வாகூறினார்.