ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருகின்றார் என சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டிருக்கும் செய்திகளை ஜனாதிபதி செயலகம் நிராகரித்திருக்கின்றது .
ஜனாதிபதியினுடைய பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ஊடகங்களுக்கு இதை கூறியுள்ளார்.
தற்போது நாடு எதிர்நோக்கியிருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது தொடர்பில் தற்போது ஜனாதிபதியின் கவனம் முழுவதுமாக செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நமது நாட்டினை சீர்குலைக்கின்ற நோக்கத்தில் சில குழுக்களால் இவ்வாறு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அனைத்து அரசாங்க உறுப்பினர்களுடனும் நாளை (22) கூட்டமொன்றை நடத்த உள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மார்ச் 23 புதன்கிழமை சர்வகட்சி மாநாட்டை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.