நாட்டில் ஏற்பட்டுள்ள காகித தட்டுப்பாட்டின் காரணமாக ஒத்திவைக்கப்படவிருந்த மேல் மாகாண பாடசாலைகளின் தரம் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான இவ்வருட தவணைப் பரீட்சைகளை மீண்டும் நடாத்துவதாக மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்திருக்கின்றது.
பரீட்ச்சை தாள்களை அச்சிடுவதற்கு தேவையான காகிதங்களை தற்போது பெற்றுக்கொள்ள முடியும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளரான ஸ்ரீ லால் நோனிஸ் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களினது தவணைப் பரீட்சைகளை திட்டமிட்ட அட்டவணைபடி இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.