பேஸ்புக் சமூக வலைத்தளத்தினுடைய தாய் நிறுவனமக்கிய மெடா நிறுவனமானது, ஒரு தீவிரவாத நிறுவனமாகும் என ரஷ்யவின் ஊடகங்களினால் அடையாளப்படுத்தப்பட்டு செய்தி வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்த சமூக வலைத்தளத்தினுடைய கட்டமைப்பை தடை செய்யுமாறு கோரி, அந்த நாட்டின் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தீர்ப்பொன்றினை அடிப்படையாக கொண்டே இந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது.
இதனடிப்படையில், IS அமைப்பினைப் போன்றே, மெடா நிறுவனமும் தீவிரவாத அமைப்பாகும் என அடையாளப்படுத்துவதற்கு ரஷ்யா நடவடிக்கையினை எடுத்துள்ளதாக நம்பப்படுகின்றது.
எவ்வாறிருந்தாலும், இந்த தடையானது மெடா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்ராகிராம் ஆகிய வலையமைப்புகளை மாத்திரமே தடை தடை விதித்திருக்கின்றதே தவிர வட்ஸ்அப் வலையமைப்புக்கு தடை அறிவிக்கப்படவில்லை.