குருநாகல் நுகர்வோர் அதிகாரசபை நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் கீழ் கொபேகனே பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினை சுற்றி வளைத்து எரிபொருள் இருப்புக்களை மறைத்து அதிகூடிய விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்குச் சென்ற பரிசோதகர்களை, டீசல் இல்லை என்று கூறி 7,000 லீற்றர்கள் சாதாரணமன டீசலையும், 23,000 லீற்றர்கள் சுப்பர் டீசலையும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் மறுபக்கத்தில் ஒரு லீற்றர் சாதாரண டீசலின் விலை 28.50 ரூபா என்று அதிக விலைக்கு விற்கப்பட்டதை அறிந்து கொண்டார்கள்.
பொதுமக்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்க்கு அமைய நேற்று (21) மதியம் சோதனை நடத்தப் பட்டிருக்கின்றது.
எரிபொருள் நிரப்ப வருகின்ற வாடிக்கையாளர்களிடம் எரிபொருள் தீர்ந்து விட்டது எனவும் , அப்படி கிடைக்கும் போது எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருக்குச் சொந்தமான இன்னும்மொரு இடத்தில் அதிகூடிய விலைக்கு எரிபொருளை விற்பனை செய்து வந்ததாகவும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.