எதிர்வரும் சிங்கள – தமிழ் புத்தாண்டு முடியும் வரை லிட்ரோ எரிவாயுக்களின் விலையினை அதிகரிப்பதில்லை என நிறுவனம் தீர்மானித்தீர்மானித்திருக்கின்றது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது, இதன் மூலம் சந்தையில் நிலவுகின்ற எரிவாயு தட்டுப்பாடுகளை எதிர்வரும் சனிக்கிழமையோடு (26) முடிவுக்கு கொண்டுவர எதிர் பார்க்கின்றோம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வாரத்திற்குள் இலங்கைக்கு வந்த எரிவாயுவுக்கான பணத்தினை இலங்கை மத்திய வங்கி நேற்று முன்தினம் ( 21) வழங்கியுள்ளது. இப்படி வழங்கப்பட்ட பணம் பத்து மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும். அதன்படி 3500 மெற்றிக் தொன் எரிவாயு இறக்குமதி செய்யும் பணி நேற்று (22) ஆரம்பமாகியது.
லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட மேலும் இரண்டு எரிவாயு தாங்கிகளை எதிர்வருகின்ற வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இலங்கைக்கு வரவுள்ளன.
அதன் அடிப்படையில் , லிட்ரோ நிறுவனம் இந்த வாரத்தில் இருந்து தினசரி 120,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு வழங்கவுள்ளது.