(எம்.என்.எம். அப்ராஸ் )
“கல்முனை பிராந்திய மக்களினுடைய அடிப்படை தேவைகளினை தன்னிறைவடைதல்” எனும் கல்முனையன்ஸ் போரமினுடைய இலக்கினை அடைகின்ற முகமாக பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை போரமினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கல்முனை பிரதேசத்தில் இருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் சுத்தமான குடிநீர் இணைப்பினைக் கொண்டு சேர்க்கின்ற நோக்கில் கடந்த 2017ம் ஆண்டு கல்முனையன்ஸ் போரத்தினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருந்த “2020இற்குள் யாவருக்கும் சுத்தமான குடிநீர்” எனும் செயற்றிட்டத்திற்கு அமைவாக இதுவரை காலமும் சுமார் 120 பயனாளிக் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கிவைக்கப்பட்டிருக்கின்றது.
இத்திட்டத்தினுடைய அடுத்த கட்டமாக தெரிவுசெய்யப்பட்டிருந்த 21 பயனாளிக் குடும்பங்களுக்குமான குடிநீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வானது கல்முனையன்ஸ் போரமினால் (20) இக்பால் கழக கேற்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கான குடிநீர் இணைப்புக்கான கோவைகள் கையளிக்கப்பட்டதுடன் இத்திட்டத்தினுடைய நோக்கங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற சமூக அடைவுகள் போன்றவைகால் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
2016ம் ஆண்டு கல்முனையன்ஸ் போரமால் முன்னெடுத்து செல்லப்பட்ட கல்முனைக்கான கல்வி மற்றும் சமூக, பொருளாதார தனிநபர் தகவல் திரட்டலின் மூலமாக இணங்காணப்பட்ட குடும்பங்களுக்கே இச்செயற்றிட்டத்திற்கான பயனாளிகளாக தெரிவுசெய்யப்பட்டிருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும் .