“சஜித் அணியில் இருந்து எட்டு உறுப்பினர்கள் இன்னும் இரு வாரத்திற்குள் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவார்கள்.” என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில் தகவல் வெளியிட்டுள்ளார்.
“ நிதி அமைச்சர் பதவியினை பெறுவதற்காக ஹர்டி டி சில்வா ஆட்டோவில் மற்றும் வீதிகளில் பயணிக்கின்றார் என்றும் குளறியுள்ளார். எதிரணி ஆட்சியைப் பிடிப்பதென்பது பகல் கனவாகும் என்பதை நினைவில் கொள்ளும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் சஜித் அணியில் உள்ள 10 பேர் ரணிலுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். இன்னும் இரு வாரத்திற்குள் ரணில் பக்கம் செல்ல இருக்கின்றார்கள் .” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்லாமல் நாட்டின் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை தானும் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார், உணவு பாதுகாப்புக்களுக்கு அச்சுறுத்தல் என்பன இல்லை எனவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.