கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்களினது எண்ணிக்கை தற்போது ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பயணக் கட்டுப்பாடுகள் அல்லது சுகாதார வழிகாட்டுதல்களை விதிக்கப்படாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்க முடியாது உள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே கூராயுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் நேற்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடையத்தினை தெரிவித்தார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், வைரஸ் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் அதிகளவில் நாடியுள்ளர்கள் என்றும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் முதன்மைத் தடுப்பூசிகளைப் பெற்றிருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில் உடல்நலம் தொடர்பில் பொதுமக்கள் இன்னும் அவதானமாக இருக்குமாறும் சுகாதார நடைமுறைகளைப் தவறாது பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்பாதக முழுமையாக தடுப்பூசி போடப்படுவதினை உறுதிசெய்யும் நோக்கத்தில் பொதுமக்களை ஊக்குவிப்பதற்காகவே ஜனவரி 25 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும்வெளியிடப்பட்டதாகவும், பொதுமக்களுக்கு போதிய அவகாசம் இதனால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தனதுரையில் குறிப்பிட்டார்.