முன்னாள் அமைச்சராகிய பண்டு பண்டாரநாயக்க உட்பட நால்வர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கஜமுத்துக்களை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாகவே இவர்கள் விசேட அதிரடி படையினரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
மீமேலும் தெரியவருவதாவது கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவல்களுக்கு அமைய, அம்பாறை பகுதியில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறிப்பிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.