ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று சத்தியாகிரக போராட்டமொன்று நடத்தப்பட்டது.
ஹயிட் பார்க் மைதானத்தில் இன்று மாலை இந்த சத்தியாகிரக போராட்டம் நடத்தப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிவ் விக்ரமசிங்க தலைமையில் இந்த சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள், பொதுமக்களுடன் தரையில் அமர்ந்தவாறு இந்த போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.