இலங்கை தொடர்பாக அறிக்கை ஒன்றினை சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டிருக்கின்றது.
தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பான பகுப்பாய்வுகள் இந்த அறிக்கையில் உள்ளடங்கியிருக்கின்றது.
குறித்த அறிக்கையில், கொவிட்-19 காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்திருப்பதுடன், இதன் மூலமாக சுற்றுலா பயணிகளின் வருகை இழப்பு மற்றும் பல கடுமையான முடக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட்-19 இன் தாக்கமானது 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மொத்தமாக உள்நாட்டு உற்பத்திகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறைக்கு காரணமாக அமைந்திருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச நாணய நிதியம் (IMF), இலங்கையினுடைய பொருளாதார ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்துவதற்கு நம்பகமான மற்றும் தெளிவான மூலோபாயம், சமூக பாதுகாப்பை அவசரமாக நடைமுறைப்படுத்துதல் என்பன முக்கியமானதுடன், பெறுமதிசேர் வரிகள் மற்றும் வருமான வரிகள் அதிகரிக்கப்படுவதினை உறுதி செய்ய வேண்டும் என குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.