கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரிசியினுடை விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளமையே இதற்குக் காரணமாகும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அனைத்து வகையான உள்ளூர் அரிசிகளினதும் விலைகள், 3 ரூபா முதல் 13 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் , இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசிகளினது விலைகளும், 9 ரூபா முதல் 18 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
டொலருக்கு நிகரான ரூபாவினது பெறுமதி வீழ்ச்சியடைந்த காரணத்தினால், இந்த விலை அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.