நாட்டின் தற்போதைய எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக, வீடுகளில் பெட்ரோலை சேமித்து வைப்பதின் காரணமாக பல விபத்துக்கள் ஏற்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வீடுகளில் பெட்ரோலினை சேமித்து வைப்பதனது மிகவும் ஆபத்தானது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையினுடைய பிளாஸ்டிக் சத்திரசிகிச்சையின் விசேட வைத்திய நிபுணரான கயான் முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக பெட்ரோல் போன்ற எரிபொருட்களினால் ஏற்படுகின்ற தீச் சம்பவங்களினால், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இரண்டு நாட்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மரண சம்பவனங்கள் நிகழ்கின்றதாகவும்.
அதுமட்டுமல்லாமல், ஒவொருநாளும் 4 தொடக்கம் 6 வரையான விபத்துக்கள் பதிவாகின்றதாகவும் குறிப்பிடடார்.