நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினுடைய ஏற்பாட்டில் மதத்தலைவர்கள் மற்றும் திருமண பதிவாளர்களுக்கிடையில் போஷாக்கு மற்றும் நலவாழ்வு தொடர்பிலான கருத்தரங்கொன்றினை இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.
மேற்படி கருத்தரங்கில் மதத்தலைவர்கள், திருமண பதிவாளர்கள், மருத்துவ மாதுக்கள் என்று பலரும் கலந்துகொண்டார்கள். இங்கு வளவாளராக வருகைதந்து பேசிய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரான டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் திருமண மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் தொடர்பாகவும் விரிவாக தெளிவுபடுத்தினார்.
தற்போது நாட்டில் வேகமாக வளர்ந்துவருகின்ற ஆரோக்கியமற்ற துரித உணவுகள் தொடர்பிழும் கருத்துரைத்த டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அந்த உணவுவகைகளால் ஏற்படுகின்ற பக்கவிளைவுகள் பற்றியும் ஆழமாக தெளிவுபடுத்தியதுடன் குழந்தைகள் வளர்ப்பு, முறையற்ற உணவுப்பாவனைகளினால் இளவயது கற்பிணித்
தாய்மார்கள் அனுபவிக்கும் நோய் நிலைமைகள் அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கினார்கள். இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினுடைய பல வைத்தியர்களும் கலந்துகொண்டு போஷாக்கு மற்றும் நல்வாழ்வு தொடர்பிளும் விளக்கினார்கள்.