நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது ஜூம்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளார் சபை ஏற்பாட்டில் புலன் உறுப்புகளால் அசாத்தியங்கள் நிகழ்த்தி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கும் சாய்ந்தமருதூர் சாதணை இளைஞன் எம்.எஸ்.எம் பர்ஸானை அவர்களை பள்ளிவாசல் தலைவர் ஏ.ஹிபத்துல் கரீம் மற்றும் நம்பிக்கையாளார் சபையினர்களால் சாய்ந்தமருது ஜூம்மா பெரிய பள்ளிவாசல் நிர்வாக அலுவலகத்தில் வைத்து பாராட்டி கெளரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜூம்மா பெரிய பள்ளிவாசலினுடைய நம்பிக்கையாளார் சபையினுடைய பொருளாளர் ஏ.ஏ. சலீம் மற்றும் நம்பிக்கையாளார் சபை உறுப்பினர்கள், துணிந்தெழு இதழாசிரியர் ஜே.எம் பாஸீத் மற்றும் தனியார் வானொலி அறிவிப்பாளர் எம்.என்.எம் செளக்கி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.