நூருல் ஹுதா உமர்
தேசிய காங்கிரஸினுடைய தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா மிக அதிக நாட்களின் பின்னர் ஊடகங்களினது முன்னால் தோன்றி சமகால அரசியல் விடயங்கள் பற்றி கருத்துரைத்தார்.
அதில் அதிகமான இடங்களில் ராஜபக்ஸ குடும்பத்தினருக்கு ஆதரவாகவும் சில இடங்களில் மெத்தனப்போக்காகவே கதைகளையும் தெரிவித்த அவரினுடைய கருத்துக்களுக்கு மக்கள் மத்தியிலிருந்து பலத்த எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழ ஆரம்பித்திருக்கின்றது.
அவரது உத்தியோகபூர்வமான சமூக வலைத்தள பக்கத்திழும் கூட நேரடி அஞ்சல் செய்யப்பட்ட இவ் ஊடக சந்திப்பினுடைய காணொளியின் கீழ் அதிகமான சமூக வளைத்தள பாவனையாளர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றார்கள்.
அதில் அரசுக்கும், அரசு சார்பு நிலைப்பாட்டில் இருக்கும் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களுக்கும் இழி சொற்களைய பயன்படுத்தி தமது எதிர்ப்பை வெளிக்காட்டிய சமூக வலைத்தள பாவனையாளர்கள் அதிகமானவர்கள் நக்கல் நையாண்டியுடன் கூடிய கிண்டலான வார்த்தைகளுடன் அவரை விமர்சித்திருக்கின்றார்கள்.
மேலும் அவர் தனது அரசியல் போட்டியாளர்களுக்கு பயன்படுத்தும் சொற்களை கொண்டும் அவரை கிண்டல் செய்துள்ள பொதுமக்கள் ஆளும்தரப்பினில் உள்ள ஒரே முஸ்லிம் கட்சியான உங்கள் தேசிய காங்கிரஸ் வெளியில் விமர்சிப்பது போன்று பாசாங்கு காட்டிக்கொண்டு மறைமுகமாக அரசின் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்காமல் அரசை விட்டு வெளியேறி அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டமொன்றையாவது முன்னின்று நடத்த முடியுமா என்று பகிரங்க சவாலும் விடுத்திருக்கின்றார்கள்.
அதுமட்டுமல்லாமல் சாய்ந்தமருது நகர சபை விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கும் அவர் ஏனோ தானோ என்று பதிலளித்திருந்தமையும் பெரியளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அரசினுடைய பங்காளியாக இருக்கும் ஒரு கட்சியினுடைய தலைவரினை பொதுவெளியில் மக்கள் இப்படி விமர்சித்து தள்ளியிருப்பது அரசின் மீதும் அதாஉல்லா எம்.பி மீதும் மக்களுக்கு இருக்கும் வெறுப்பை வெளிக்காட்டுகின்றது.
சில காலமாக பொருளாதார அமைச்சர் பஷில் தரப்பினருடைய நம்பிக்கையினை இழந்து அரசியல் செல்வாக்கிலும் பாரிய வீழ்ச்சியினை சந்தித்துள்ள தேசிய காங்கிரஸுக்கு மக்கள் செல்வாக்கும் இல்லாமலாகி இருப்பது இங்கு வெளிபடுகின்றது.