பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
உணவுப்பஞ்சத்தில் இருந்து எமது நாட்டை அவசரமாக எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் என தேசிய காங்கிரஸினுடைய தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் அவர்கள் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(27) மாலை இடம்பெற்ற இவ் விசேட செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது உரையில் கூறியதாவது ரணில் விக்ரமசிங்க ஆலோசனை சொல்லுகின்ற அளவிற்கு நாட்டினுடைய பொருளாதார நிலைமை மாறிஇருக்கின்றது. ஏனெனில் ரணிலின் ஆட்சியில் தானே எமக்கு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டன.அவருக்கு நெல்லு மரத்தை(அரிசி) தெரியாது.எனவே தான் இனவாதத்தினை வைத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.
உணவுப்பஞ்சத்தில் இருந்து எமது நாட்டை அவசரமாக எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். தற்போது அரசாங்கத்துடன் 11 கட்சிகளுடன் நாமும் ஒன்றாகவே இருக்கின்றோம்.
எமது கட்சி ஒரு தனி கட்சியாகும். எங்களது கட்சியின் முக்கிய நோக்கம் நாட்டுப்பற்றாக அமைந்திருக்கின்றது. இந்த நோக்கம் தான் அரசாங்கத்துடன் எமது கட்சியை ஒத்து போக வைக்கின்றது. எனவே தான் எமது நாட்டிற்கு வெளிநாட்டு சக்திகளினால் தீங்கு ஏற்படக் கூடாது என்பதில் நாம் கவனமாகசெயற்பட்டு கொண்டிருக்கின்றோம்.
உலகம் முழுவதும் இன்று 3 ஆவது போருக்காக தயாராகி தயாராகிக் கொண்டிருக்கின்றது. இதில் யார் சண்டியர் என்பதை தேடி கொண்டிருக்கின்றார்கள்.எனவே தான் இவ்வாறான சண்டியர்களுக்கு ஆக்கிரமிக்க தேவைப்படுகின்ற இடமாக இலங்கை இருக்கின்றது.
என்பதை நாம் அனைவரும் அறிவோம் கடந்த காலங்களில் எம்.சி.சி ஒப்பந்தம் மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்கவே தற்போது ஆலோசனை கூற வருகின்றார் என்பதை நாம் புரியாமல் இல்லை.
சில நாடுகள் தங்கள் எதிரிகளினை தாக்குவதற்கு இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்த பார்க்கின்றார்கள்.இதனால் எமது வீட்டினுள் தான் யுத்தம் ஆரம்பமாகும்.ஆகவே தான் நாங்கள் பொருளாதார நிலையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்கின்ற அவல நிலையினை பாவித்து எமது நாட்டின் வளத்தினை சூறையாடுகின்ற எந்த சக்தியாக இருந்தாலும் தேசிய காங்கிரஸ் கட்சி சகல கட்சிகளுடன் இணைந்து பாடுபடும் என்பதை தெளிவு படுத்த விரும்புகின்றேன்.
அதே போன்று சாய்ந்தமருது நகரசபையினுடைய விடயமும் கால ஓட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.மேலும் சில முஸ்லீம் பிரமுகர்களால் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற முஸ்லீம் கூட்டமைப்பு என்பது தீத்தக்கரை வியாபாரம் என்பதற்கு ஒப்பானதாகும். எந்த கூட்டமைப்பும் மக்களுக்கு பிரயோசனமில்லை என்பதே எமது கருத்தாகும் என்றும் தனதுரையில் குறிப்பிடடார்.