இந்தியா, இலங்கைக்கு இடையில் 6 வகையான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியவினுடைய வெளிவிவகார அமைச்சரான கலாநிதி எஸ்.ஜெயசங்கரினுடைய இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
நேற்று (28) பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் இது தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன.
ஒப்பந்தத்தின்படி, இலங்கையினுடைய டிஜிட்டல் அடையாளத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் மற்றும் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினை நிறுவுதல் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு வெளியே உள்ள மூன்று தீவுகளிலும் கலப்பு மின் நிலையத் திட்டங்களினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான புரிந்துணர்வு இவ் ஒப்பந்தங்கள் இந்திய அரசாங்கத்தினுடைய உதவியுடன் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது.