வரும் ஏப்ரல் 5 ஆம் திகதியில் இருந்து சூரியன் உச்சம் கொடுப்பதினல் , அதன் பின்னர் வருகின்ற காலநிலை மேலும் வெப்பமடைகூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க கூறியுள்ளார்.
அனல் காற்றின் காலம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போத அவர், பருவமழை ஆரம்பமாகி மார்ச் நடுப்பகுதியில் நின்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், மழைக்கான அறிகுறிகள் எதுவுமின்றி ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து மழை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக , தற்போது நிலவும் வெப்பமான காலநிலையில் மாற்றங்களை கொண்டு வரும் கணிசமான மழைபொழிவை அனுபவிப்பதற்கு ஒரு மாதத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படும் எனவும் தெரிவித்தார்.
ஆனாலும், இடையில் சிறிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் . இருப்பினும், தற்போதுள்ள வெப்பமான காலநிலை மாறுவதற்கு இது போதுமானதாக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார் .