நூருல் ஹுதா உமர்
அவுஸ்திரேலிய,காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் (AUSKAR) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்தரின் 130 வது ஜனன தினத்தினை முன்னிட்டு காரைதீவு கோட்டப் பாடசாலைகளுக்கிடையில் காரைதீவு இ.கி.மி பெண்கள் பாடசாலையில் நடைபெற்றதமிழ் இலக்கியம், ஆக்கத்திறன் போட்டி – 2022 இல் மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவி எம்.ஏ.ஸீனத் லிமா முதலாம் பிரிவு கட்டுரைப் போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்றிருக்கின்றார்.
வெற்றியீட்டிய குறித்த மாணவிக்கான ஞாபகச்சின்னமும் பணப்பரிசிலும் காரைதீவு விபுலாநந்தர் மணி மண்டபத்தில் நடபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த மாணவி இறுதியாக வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில் புலமைப்பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.