நூருல் ஹுதா உமர்
சர்வ முஸ்லிம் கட்சிகளது மாநாடு காலத்தின் தேவையாக இருக்கின்றது எனவும் இதுதொடர்பில் பத்திரிகைகளின் மூலம் தான் வாசித்ததாகவும்.
கிழக்கின் கேடயம் வெளியிட்டிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற விடயங்கள் மிகவும் பெறுமதியானது இதனோடு இன்னும் பல விடயங்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டிய தேவைப்பாடு இருப்பதாக கூறியதோடு.
இப்பணியில் எல்லோருடனும் இணைந்து சாதாரண ஒரு தொண்டனாக அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என கிழக்கின் கேடயத்தின் தலைவர் எஸ்.எம். சபீஸ் உடனான நேரடி சந்திப்பில் ஐக்கிய மக்கள் சமாதான முன்னணியின் செயலாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமாகிய எம்.ரீ.ஹசன் அலி குறிப்பிட்டார்.
இச்சந்திப்பின் போது மேலும் கருத்து தெரிவித்த எம்.ரீ.ஹசன் அலி அவர்கள், விரைவில் கட்சியின் உயர்மட்ட குழுவுடன் தாம் கலந்தாலோசித்து விட்டு இதுதொடர்பான எங்கள் கட்சியினுடைய ஊடக அறிக்கையினையும் வெளியிடுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் .
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர் ஹக்கீம் பெரும்பான்மை இன கட்சிகளினது மத்தியில் சரிந்து கிடக்கின்ற தன்னுடைய செல்வாக்கினை மீளக்கட்டமைக்கும் சந்தர்ப்பாகமாக ஏப்ரல் முதலாம் திகதி நடத்தும் பேரணியை பயன்படுத்த பார்க்கின்றார் எனவும் குறிப்பிடடார்.
மேலும் பெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களினால் முன் மொழியப்பட்டிருந்த கரையோர மாவட்டம் மற்றும் தென்கிழக்கு அலகு போன்றவற்றைப் பெறுவதற்கு 22 வருடங்கள் எதுவுமே செய்யாத ஹக்கீமை இன்னும் ஏதாவது சமூகத்திற்கு செய்வார் என்று நாம் நம்பலாமா? என கேள்வியும் எழுப்பினர்.